For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சதாமின் நிதியமைச்சர் அமெரிக்காவிடம் பிடிபட்டார்

By Staff
Google Oneindia Tamil News

கத்தார்:

அதிபர் சதாம் ஹூசேனிடம் நிதியமைச்சராக இருந்த ஹிம்மத் அல்- அஸ்ஸாவாய் அமெரிக்கப் படைகளிடம்பிடிபட்டுள்ளார்.

அவரை ஈராக்கிய போலீசாரே கைது செய்து அமெரிக்கப் படைகளிடம் ஒப்படைத்தனர். அமெரிக்கா வெளியிட்ட55 ஈராக்கிய தேடப்படுவோர் பட்டியலில் இவர் 45 வது இடத்தில் இருந்தார்.

பாக்தாதில் இவரை ஈராக்கிய போலீசார் பிடித்து அமெரிக்காவின் மெரைன் படைகளின் ஒப்படைத்தனர்.

நேற்று தான் சதாம் ஹூசேனின் பாத் கட்சியின் முக்கியத் தலைவரான அபுத்ல் அஜீஸ் அல்-நஜாம் என்பவரை குர்துஇனப் போராளிகள் ஈராக்கின் வட பகுதியில் உள்ள மொசுல் நகரில் வைத்து கைது செய்து அமெரிக்கப்படைகளிடம் ஒப்பட்டைத்தனர்.

இந்த இருவர் தவிர சதாமின் 2 நெருங்கிய உறவினர்களும் (சகோதரர்கள்) கைது செய்யப்பட்டுவிட்டனர். சதாமின்அணு ஆயுத ஆலோசகர் அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார்.

இதற்கிடையே ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறக் கோரி நாடு முழுவதும் நேற்று மாபெரும்பேரணிகள் நடந்தன. இதில் ஷியா, சன்னி இன மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.

சதாம் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு அமெரிக்காவுக்கு எதிராக நடந்துள்ள முதல் எதிர்ப்புப் பேரணிகள் இவைதான்.

அதே போல ஈராக்கில் அமெரிக்கா ஆதரவிலான அரசு அமைவதற்கு சவுதி அரேபியா, ஈரான், சிரியா உள்ளிட்ட9 அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஈராக்கில் அடுத்த ஆட்சி அமைக்கும் விஷயத்தில் அமெரிக்காதலையிடவே கூடாது என இந்த நாடுகள் கூறியுள்ளன.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X