விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 13 வயது சிறுமி மீட்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் 13 வயது சிறுமி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டார். அவரை மீட்ட போலீஸார்,சிறுமியை வைத்து விபச்சாரம் செய்த தாய்,மகன் மற்றும் அவரது மனைவியைக் கைது செய்தனர்.
சென்னை-அயனாவரம் ராஜு தெருவில் உள்ள ஒரு வீட்டில்விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்குத்தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து அந்த வீட்டை போலீஸார் முற்றுகையிட்டனர்.
அங்கு 13 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி சித்திரவதை செய்து விபச்சாரம் செய்து வந்தது தெரியவந்தது.
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த வெங்கடலட்சுமி என்ற அந்த சிறுமியை போலீஸார் மீட்டுகீழ்ப்பாக்கம்-கெல்லீஸில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வசந்தி, அவரது மகன் சுதாகர் மற்றும் சுதாகரின் மனைவிஆகியோரைக் கைது செய்தனர்.
-->












Click it and Unblock the Notifications