நெடுமாறனுக்கு ஜாமீன் தர பொடா நீதிமன்றம் மறுப்பு
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்மற்றும் அக்கட்சிப் பிரமுகர்களின் ஜாமீன் மனுவை பொடா சிறப்பு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கடந்த ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி நெடுமாறன்கைது செய்யப்பட்டார். அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழர் தேசிய இயக்கப் பிரமுகர்களான சுப. வீரபாண்டியன், பரந்தாமன், சாகுல் ஹமீது, தாயப்பன்,பாவாணன் ஆகியோரும் புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தங்களை ஜாமீனில் விடக் கோரி 6 பேரும் பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில்மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன் பல முறை தீர்ப்பை ஒத்திவைத்து விட்டு பின்னர் கடந்த17ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் அன்றும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை.தீர்ப்பை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி இவ்வழக்கின் தீர்ப்பை நீதிபதி ராஜேந்திரன் இன்று வழங்கினார். நெடுமாறன் உள்ளிட்ட 6பேரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
"கைது செய்யப்பட்டுள்ள நெடுமாறன் உள்ளிட்ட 6 பேரும் தொடர்ந்து புலிகளை ஆதரித்துக்கொண்டுள்ளனர். எனவே அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தால் அவர்கள் வெளியே சென்றுசாட்சிகளைக் கலைக்க முயற்சிக்கலாம். எனவே அவர்களுடைய ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்கிறேன்" என்று நீதிபதி ராஜேந்திரன் தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications