For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு புரளி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை உயர் நீதிமன்றத்தில் குண்டு வெடிக்கப் போவதாக யாரோ கிளப்பி விட்ட புரளியைத்தொடர்ந்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

நேற்று காலை சுமார் 11.30 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஒருதொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசிய மர்ம நபர் உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறிதுநேரத்தில் அது வெடித்துச் சிதறும் என்றும் கூறி விட்டு போனை வைத்து விட்டான்.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் உயர் நீதிமன்ற வளாகத்திற்கு விரைந்தனர்.மோப்ப நாயும் அழைத்துச் செல்லப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு போலீசாரும் வெடிகுண்டுநிபுணர்களும் அங்கு தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

இறுதியில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவல் வெறும் புரளி என்று தெரிய வந்தது.இதையடுத்து புரளியைக் கிளப்பியவனைப் போலீசார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் உயர் நீதிமன்றத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X