காஷ்மீர்: 18 பாக். தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் ராணுவத்தினருடன் நடந்த இரு வேறு துப்பாக்கிச் சண்டைகளில் 18 பாகிஸ்தான்தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஹில் கக்கா காட்டுக்குள் இன்று காலை ராணுவத்தினருக்கும் பாகிஸ்தான்தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து ராணுவத்தினர்மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போதுதான் இந்தத் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. அப்போதுராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் சில கிரனைட் குண்டுகளையும் வீசி எறிந்துள்ளனர்.
பல மணி நேரம் வரை நீடித்த இந்தத் துப்பாக்கிச் சண்டையில் 14 பாகிஸ்தான் தீவிரவாதிகளைராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். ஒரு ராணுவ வீரர் குண்டுக் காயம் அடைந்தார். அவர்உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து 4 ஏ.கே. ரக துப்பாக்கிகளும், துப்பாக்கிக் குண்டுகளும்,கிரனைட் குண்டுகளும், வயர்லெஸ் கருவிகளும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.
அதேபோல் ரஜெளரி பகுதியில் நடைபெற்ற மற்றொரு துப்பாக்கிச் சண்டையில் 4லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
குண்டு வெடிப்பில் 6 பேர் பலி:
இதற்கிடையே காஷ்மீரில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர்கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர்.
புல்வாமா மாவட்டத்தில் உள்ள குல்ஷான்போரா என்ற இடத்தில் சக்தி வாய்ந்த ஒரு குண்டைதீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இன்று காலை 8 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்தது.
இந்தக் குண்டு வெடிப்பில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 2 பேர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.
மேலும் 11 பேர் இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்தனர். இவர்களில் சிலர் நிலை கவலைக்கிடமாகஉள்ளது.
இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் இந்தக் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்கவில்லை.சம்பவம் நடந்த இடத்தைப் பாதுகாப்புப் படையினரும் போலீசாரும் முற்றுகையிட்டுள்ளனர்.குண்டை வெடிக்கச் செய்த தீவிரவாதிகளை அவர்கள் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications