ரசாயன ஆயுதங்களை அழிக்க ஆரம்பித்துவிட்ட இந்தியா
ஹேக் (ஹாலந்து):
இந்தியா, ரஷ்யா, அமெரிக்க ஆகிய மூன்று நாடுகளும் தங்களிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிக்க ஆரம்பித்துவிட்டதாக சர்வதேசரசாயன ஆயுதத் தடுப்பு அமைப்பு கூறியுள்ளது.
ஹாலந்து நாட்டின் ஹேக் நகரில் உள்ள இந்த அமைப்பின் டைரக்டர் ஜெனரல் ரொகேலியோ பிர்டர் இனைத் தெரிவித்தார். 151 நாடுகள்உறுப்பிராக உள்ள இந்த அமைப்பு வரும் 2007ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் ரசாயான ஆயுதங்களை ஒழித்துக் கட்ட தீவிரமாகமுயன்று வருகிறது.
இந்த அமைப்பின் முயற்சியால் தான் ரசாயான ஆயுதத் தடை ஒப்பந்தம் ஐ.நாவில் கையெழுத்தானது.
ரொகலிேயோ பிர்டர் நிருபர்களிடம் கூறியதாவது:
உலகில் மொத்தமே 4 நாடுகள் தான் தங்களிடம் ரசாயன ஆயுதங்கள் இருப்பதை வெளிப்படையாக கூறியுள்ளன. அவை அமெரிக்கா,ரஷ்யா, இந்தியா மற்றும் பேர் வெளியிட விரும்பாத இன்னொரு நாடு (பாகிஸ்தான்?) ஆகியவை.
1993ம் ஆண்டில் கையெழுத்தான சர்வதேச ரசாயன ஆயுதத் தடை ஒப்பந்ததில் இந்த நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தஒப்பந்தத்தின்படி வரும் ஏப்ரல் 29ம் தேதிக்குள் ஒரு குறிப்பிட்ட அளவு ரசாயன ஆயுங்களை இந்த நாடுகள் அழித்தாக வேண்டும்.
ரஷ்யா தன் மிக அதிக அளவாக 40,000 டன் ஆயுத ரசாயனத்தை வைத்துள்ளது. இதைக் கொண்டு ஆயிரக்கணக்கான ரசாயானகுண்டுகாளத் தயாரிக்க முடியும். இதில் ஒரு சதவீதத்தை வரும் 29ம் தேதிக்குள் பஷ்யா அளித்தாக வேண்டும். அந்த வேலையை ரஷ்யாதொடங்கிவிட்டது.
அடுத்தபடியாக அமெரிக்காவிடம் 28,000 டன் ரசாயன ஆயுதங்கள் இருந்தன. இதில், 20 சதவீதத்தை அமெரிக்கா அழித்துவிட்டது.
அதே போல இந்தியாவும் நான்காவது நாடும் ஒப்புக் கொண்ட அளவுக்கு ரசாயான ஆயுதங்களை அழித்துவிட்டன.
ரஷ்யா- அமெரிக்காவுக்கு இடையிலான பனிப் போரின்போது அல்பேனியா நாட்டில் பல ரசாயன ஆயுதங்கள் குவிக்கப்பட்டன. அதைஅல்பேனிய அரசு சமீபத்தில் அழித்துவிட்டது.
ஆனால், வளைகுடாவில் உள்ள பல நாடுகள் ரசாயன ஆயுதங்களைத் தயாரித்து வைத்துள்ளன. அவை ஒப்பந்ததிலும் கையெழுத்திடமறுக்கின்றன என்றார்.
ஈராக்கிடம் விதிகளுக்கு மாறாக ரசாயனம் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதாகக் கூறித் தான் அமெரிக்கா தாக்கியது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் முக்கிய ரசாயன தொழிற்சாலைகளைப் பார்வையிட ஐ.நா. குழு வரும் 29, 30ம் தேதிகளில்இஸ்லாமாபாத், டெல்லி நகர்களுக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications