முக்கிய அமைதி குழுவில் இருந்து புலிகள் விலகல்
கொழும்பு:
இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து இரு தினங்களுக்கு முன் விலகிய விடுதலைப் புலிகள் இப்போதுமனிதாபிமானத் தேவைகளுக்கான மறுசீரமைப்புக் கமிட்டியில் இருந்தும் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது.
போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டன. இதில் புலிகள், இலங்கை அரசு தவிரநார்வே அமைதிக் குழுவினரும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த மனிதாபிமானத் தேவைகள் கமிட்டிக்குஜப்பானிய அமைதித் தூதர் யசுஷி அகாஷி ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசு அளித்த உறுதிமொழிகள் எதுவும் முழுமையாகநிறைவேற்றப்படவில்லை. இதனால் அடுத்த சுற்று தாய்லாந்து பேச்சுவார்த்தையையும், ஜப்பான் நிதியுதவிமாநாட்டையும் புலிகள் புறக்கணிக்க உள்ளனர்.
இந் நிலையில் உடனடி மனிதாபிமான தேவைகளுக்கான மறுசீரமைப்புக் கமிட்டியில் இருந்தும் விலகிக்கொள்வதாக புலிகள் இன்று அறிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், பேச்சுவார்த்தைகளில் நாங்கள் பங்கேற்பது என்பது முழுக்க முழுக்க இலங்கை அரசின் கைகளில்தான் உள்ளது என்றும் புலிகள் கூறியுள்ளனர். இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் ஒப்புக் கொள்ளப்பட்டவிஷயங்களை காலம் தாழ்த்தாமல் அரசு அமலாக்க வேண்டும்.
அதைச் செய்தால் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வது எங்களுக்கு பிரச்சனையாக இருக்காது என புலிகளின்அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார். இது தொடர்பாக மனிதாபிமான தேவைகளுக்கானகமிட்டியின் இலங்கை அரசுப் பிரதிநிதி பெர்னார்ட் குணதிலகேவுக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
அதில், இனப் போரால் குடிபெயர்ந்த தமிழர்களை மீண்டும் அவர்களது சொந்த இடத்தில் குடியேறச் செய்வது மிகஅவசியமான, அவசரமான தேவையாகும். அதற்கு முதலில் வட-கிழக்குப் பகுதியை சீரமைத்தாக வேண்டும்.இதற்குத் தேவையான நிதியை உடனே நன்கொடையாளர் நாடுகளில் இருந்து வசூலிக்கும் முயற்சிகளை அரசுமேற்கொள்ள வேண்டும்.
ஓஸ்லோவில் கடந்த ஆண்டு நவம்பரில் வட-கிழக்குப் பகுதிகளை சீரமைக்க நிதியுதவி அளிக்க முன் வந்தநாடுகளிடம் இருந்து நிதியைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications