முக்கிய அமைதி குழுவில் இருந்து புலிகள் விலகல்
கொழும்பு:
இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து இரு தினங்களுக்கு முன் விலகிய விடுதலைப் புலிகள் இப்போதுமனிதாபிமானத் தேவைகளுக்கான மறுசீரமைப்புக் கமிட்டியில் இருந்தும் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது.
போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டன. இதில் புலிகள், இலங்கை அரசு தவிரநார்வே அமைதிக் குழுவினரும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த மனிதாபிமானத் தேவைகள் கமிட்டிக்குஜப்பானிய அமைதித் தூதர் யசுஷி அகாஷி ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசு அளித்த உறுதிமொழிகள் எதுவும் முழுமையாகநிறைவேற்றப்படவில்லை. இதனால் அடுத்த சுற்று தாய்லாந்து பேச்சுவார்த்தையையும், ஜப்பான் நிதியுதவிமாநாட்டையும் புலிகள் புறக்கணிக்க உள்ளனர்.
இந் நிலையில் உடனடி மனிதாபிமான தேவைகளுக்கான மறுசீரமைப்புக் கமிட்டியில் இருந்தும் விலகிக்கொள்வதாக புலிகள் இன்று அறிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், பேச்சுவார்த்தைகளில் நாங்கள் பங்கேற்பது என்பது முழுக்க முழுக்க இலங்கை அரசின் கைகளில்தான் உள்ளது என்றும் புலிகள் கூறியுள்ளனர். இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் ஒப்புக் கொள்ளப்பட்டவிஷயங்களை காலம் தாழ்த்தாமல் அரசு அமலாக்க வேண்டும்.
அதைச் செய்தால் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வது எங்களுக்கு பிரச்சனையாக இருக்காது என புலிகளின்அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார். இது தொடர்பாக மனிதாபிமான தேவைகளுக்கானகமிட்டியின் இலங்கை அரசுப் பிரதிநிதி பெர்னார்ட் குணதிலகேவுக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
அதில், இனப் போரால் குடிபெயர்ந்த தமிழர்களை மீண்டும் அவர்களது சொந்த இடத்தில் குடியேறச் செய்வது மிகஅவசியமான, அவசரமான தேவையாகும். அதற்கு முதலில் வட-கிழக்குப் பகுதியை சீரமைத்தாக வேண்டும்.இதற்குத் தேவையான நிதியை உடனே நன்கொடையாளர் நாடுகளில் இருந்து வசூலிக்கும் முயற்சிகளை அரசுமேற்கொள்ள வேண்டும்.
ஓஸ்லோவில் கடந்த ஆண்டு நவம்பரில் வட-கிழக்குப் பகுதிகளை சீரமைக்க நிதியுதவி அளிக்க முன் வந்தநாடுகளிடம் இருந்து நிதியைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications