கருப்புப் பட்டியலில் 5 தனியார் என்ஜினியரிங் கல்லூரிகள்: மாணவர்களே எச்சரிக்கை!
சென்னை:
5 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேருவது குறித்து மாணவர்கள் மிகவும்எச்சரிக்கையுடன் இருக்கும்படி அண்ணா பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலன் கருதி அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள்சாமி ரிஷி பொறியியல் கல்லூரி, சக்தி பொறியியல் கல்லூரி,ஜே.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, விழுப்புரத்தில் உள்ள அன்னை தெரசாபொறியியல் கல்லூரி மற்றும் திருவள்ளூரில் உள்ள தீன் தயாள் கல்லூரி ஆகிய 5 கல்லூரிகளுக்கும்நாங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
பல்வேறு காரணங்களுக்காக இந்தக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே மாணவ, மாணவிகள் இந்தக் கல்லூரிகளில் சேருவது குறித்து எச்சரிக்கையுடன்இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications