For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. மீது எஸ்.ஆர்.பி. உரிமை பிரச்சனை: காளிமுத்து நிராகரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயக்குமார், சமீபத்தில் நியமிக்கப்பட்ட ராணிமேரிக் கல்லூரி முதல்வர், கடலூர் சிறை ஜெயிலர் ஆகியோர் மீது காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம்இன்று சட்டமன்றத்தில் உரிமை மீறல் பிரச்சனையைக் கொண்டு வந்தார்.

ஆனால், அதை ஏற்க மறுத்த சபாநாயகர் காளிமுத்து மறுத்துவிட்டார்.

ஹிந்து நாளிதழ், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் மீது நேற்று சட்டசபையில் காளிமுத்து உரிமை மீறல்பிரச்சனையைக் கொண்டு வந்தார்.

எஸ்.ஆர்.பி. பதிலடி:

இதற்குப் பதிலடியாக இன்று ஜெயலலிதா உள்பட 4 பேர் மீது சட்டசபையில் இன்று காலை எஸ்.ஆர்.பி. உரிமைமீறல் தீர்மானத்தை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,

ராணி மேரிக் கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்திய நலையில், அவர்களைப் பார்த்து ஆதரவுகூறுவதற்காகவே, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் அங்கு சென்றனர். ஆனால் அவர்கள்கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், காவலாளியை மிரட்டியதாகவும் கூறி பொய்யான வழக்கைப் பதிவுசெய்துள்ளனர் சென்னைக் காவல்துறையினர்.

பொய் வழக்கு:

ஸ்டாலின் கல்லூரிக்குள் நுழைந்தது, அதன் பிறகு அவர் பேசியது எதையுமே நேரில் பார்க்காத கல்லூரி முதல்வர்,அவர் மிரட்டினார், அத்துமீறி நுழைந்தார் என்று பொய்யான புகாரைக் கொடுத்துள்ளார்.

கடமையாற்றச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் மீது பொய்யான வழக்கைப் போட்டுள்ளதன் மூலம், ஜெயலலிதா,கல்லூரி முதல்வர், காவல்துறை ஆணையர், சிறை ஜெயிலர் ஆகியோர் தங்களது உரிமைகளை மீறி நடந்துகொண்டுள்ளனர்.

இதனால் தான் இந்த நான்கு பேர் மீதும் உரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டு வந்துள்ளேன் என்றார்எஸ்.ஆர்.பி.

ஜெயலலிதா பதில்:

இதற்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்கையில், சட்டசபைக்கு உள்ளே எம்.எல்.ஏக்கள் என்ன பேசினாலும்அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால், வெளியே அவர்கள் செய்யும் குற்றச் செயல்களுக்குநடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது.

கடந்த 1959ம் ஆண்டு இதுதொடர்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஸ்டாலின் கைதுவிஷயத்தில் எந்த உரிமை மீறலும் இல்லை. இதை சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது என்றார்.

காளிமுத்துவின் மறுப்பு:

இதன் பின்னர் பேசிய காளிமுத்து சட்டசபைக்கு வெளியே குற்றச் செயல்களில் ஈடுபட்ட எம்.எல்.ஏக்கள்தாமரைக்கனி, தூத்துக்குடி பெரியசாமி, கும்மிடிப்பூண்டி வேலு ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

எனவே எஸ்.ஆர்.பி. கொண்டு வந்த உரிமை மீறல் பிரச்சினை தீர்மானம் நிராகரிக்கப்படுகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X