பொடா சட்டத்தை வாபஸ் பெற மார்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை
சென்னை:
பொடா சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸிட் கட்சியும் கோரிக்கைவிடுத்துள்ளது. இன்று காலை திமுக தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் இதே கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அக் கூட்டத்தைப் புறக்கணித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பொடா சட்டத்தை ரத்து செய்யக்கோரியுள்ளது.
இக் கட்சியின் தேசிய பொலிட்பீரோ உறுப்பினரான பிரகாஷ் காரட் இன்று சென்னையில் நிருபர்களிடம்பேசுகையில், தடா, மிசா சட்டங்களைப் போலவே பொடாவும் அரசியல் பழிவாங்கல்களுக்குத் தான்பயன்படுத்தப்படுகிறது என்றார்.
சட்டசபையில் வெளிநடப்பு:
இதற்கிடையே சட்டசபையில் தங்களது பேச்சுமை மறுக்கப்படுவதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்வெளிநடப்புச் செய்தனர்.
மேற்கு வங்க முதல்வர் குறித்தும் அம் மாநில கம்யூனிஸிட் அரசு குறித்தும் முதல்வர் ஜெயலலிதா கூறியகருத்துக்களைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஹேமச்சந்திரன் உமை மீறல் பிரச்சினைகொடுத்திருந்தார்.
அதுகுறித்து அவர் இன்று கேட்டபோது, தனது பசீலனையில் உள்ளதாக சபாநாயகர் காளிமுத்து பதில் சொன்னார்.
ஆனால், அவரது பதிலில் திருப்தி அடையாத ஹேமச்சந்திரன், சட்டசபையில் உரிமைகள் மறுக்கப்படுவதாகக் கூறிதனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் வெளிநடப்பு செய்தார்.
-->