மின் வயரை மிதித்த வாட்ச்மேன், 7 பசு மாடுகள் பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
தேனி:
தேனி மாவட்டம் குரங்கணி என்ற இடத்தில் வயலில் விழுந்து கிடந்த மின்சார வயரை மிதித்த 7பசுமாடுகளும், அதைக் காப்பாற்ற முயன்ற வாட்ச்மேனும் பரிதாபமாக இறந்தனர்.
குரங்கணியில் உள்ள ஒரு வயலில் பம்பு செட்டுக்குப் போகும் மின்சார வயர் துண்டிக்கப்பட்டுவிழுந்துள்ளது. அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த 7 பசு மாடுகள் மீது வயர் பட்டுள்ளது.
இதையடுத்து மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவை துடிதுடித்து கதறின. இதைப் பார்த்தவாட்ச்மேன் ஓடிவந்து மாடுகளை அங்கிருந்து இழுக்க முயன்றார்.அப்போது அவர் மீதும் மின்சாரம்பாய்ந்தது.
இதையடுத்து வாட்ச்மேனும், 7 மாடுகளும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம்அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications