For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தர்மபுரி மாவட்டத்தை பிரிக்கும் திட்டம் இல்லை: ஜெ. அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தர்மபுரி மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.

சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய ஜெயலலிதா, வரும் 2004ம் ஆண்டுவரை மாவட்டங்களைப் பிரிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் இந்தத் தடை உத்தரவுஅமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தர்மபுரி மாவட்டத்தைப் பிரித்து, கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்ட புதியமாவட்டம் அமைக்கும் அளவுக்கு அரசின் நிலை திருப்திகரமாக இல்லை.

இருப்பினும் கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை நிர்மாணிக்க அரசுதீவிர விருப்பம் கொண்டுள்ளது. அதை நிறைவேற்ற மத்திய அரசின் உத்தரவு தடையாக உள்ளதைத்தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, மயிலாடுதுறையை தலைமையிடமாகக்கொண்ட புதிய மாவட்டம் அமைக்க பா.ஜ.க. உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் கோரிக்கைவிடுத்தார்.

ஆனால் நாகப்பட்டினம் மாவட்டம் ஏற்கனவே மிகச் சிறிய மாவட்டமாகும். அதனால் அதுபிரிக்கப்பட மாட்டாது என்றார் ஜெயலலிதா.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X