லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்
டெல்லி:
கடந்த 10 நாட்களாக நீடித்து வந்த லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்பெற்றுக் கொள்ளப்பட்டது.
10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தக் கோரி கடந்த 10 நாட்களாக லாரி உரிமையாளர்கள்வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
லாரி உரிமையாளர்களின் 7 கோரிக்கைகளை மட்டுமே ஏற்பதாகவும் மற்ற 3 கோரிக்கைகளைநிராகரிப்பதாகவும் 2 நாட்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து லாரி ஸ்டிரைக்நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மீண்டும் மத்திய அரசுடன் லாரி உரிமையாளர்கள் பேச்சு நடத்தினர்.அப்போது இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.
முன்பு நிராகரிக்கப்பட்ட 3 கோரிக்கைகளையும் கூட அரசு பரிசீலிப்பதாக உறுதி அளித்தது. டீசல்விலை லிட்டருக்கு ரூ.1 வரை குறைப்பதாகவும் சுங்க வரி ரத்து செய்வது குறித்து ஆலோசனைக்குழு அமைப்பதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து லாரி உரிமையாளர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களாக நின்று போயிருந்த லாரிகள் நேற்று நள்ளிரவு முதல் ஓடத்தொடங்கின.