மகன் தலையை அறுத்து பூஜை: தந்தைக்கு ஆயுள் தண்டனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மகன் தலையை அறுத்து பூஜை அறையில் வைத்த தந்தைக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் சந்திரசேகர்.இவருக்கு சாந்தி என்ற மனைவி, சண்முகம், குமார்,விஸ்வநாதன் என்ற 3 மகன்கள் இருந்தனர்.

சந்திரசேகர் வேலை ஏதும் பார்க்காமல் ஊர் சுற்றிக் கொண்டு இருந்துள்ளார். இதை அவரது மகன்கள்கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர், கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி தனது மூத்த மகன்சண்முகத்தைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். பின்னர் தலையைத் துண்டித்து வீட்டு பூஜை அறையில்வைத்து விட்டார். ஏதோ பூஜையும் நடத்தியுள்ளார்.

அடுத்த நாள் இந்தக் கொலைச் சம்பவம் வெளியே தெரிந்து சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவர் மீதுவிரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரணை இறுதியில், சந்திரசேகருக்குதூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள்தினகர், அசோக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துதீர்ப்பளித்தது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+