For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈராக்கிய துணைப் பிரதமர் சரணடைந்தார்

By Staff
Google Oneindia Tamil News

கத்தார்:

ஈராககிய துணைப் பிரதமரும், அதிகாரத்தில் அதிபர் சதாம் ஹூசேனுக்கு அடுத்த நிலையில் இருந்தவருமானதாரிக் அஜீஸ் அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்துள்ளார். அதே போல ஈராக்கிய உளவுப் பிரிவுத் தலைவரானபரூக் ஹிஜாசி அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டார்.

Tariq Azizகிருஸ்துவரான இவர் தனது பெயரை முஸ்லீம் பெயராக வைத்துக் கொண்டவர். கடந்த 15 ஆண்டுகளில்வெளியுலகுக்கு பழக்கமான ஒரே ஈராக்கிய அமைச்சரும் அவர் தான். சமீபகாலமாக இவரை சதாம் ஹூசேனின்ஒதுக்கியே வைத்திருந்தார்.

அவர் நேற்றிரவு அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார். அவர் இப்போது பாக்தாதில் அமெரிக்கப் படைகளின்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் 55 முக்கிய தேடப்படுவோர் பட்டியலில் இவர் 43வது இடத்தில் இருந்தார்.

பேரழிவு ஆயுதங்கள் எங்கே?:

தன்னிடம் இருந்த பேரழிவு ஆயுதங்களை ஈராக் அழித்திருக்கக் கூடும் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்கூறியுள்ளார்.

இந்த ஆயுதங்களை அழிப்பதாகக் கூறிக் கொண்டு தான் ஈராக்கை அமெரிக்கா தாக்கியது. ஆனால், இன்று வரைஒரு ரசாயன, அணு, உயிரியல் ஆயுதம் கூட ஈராக்கில் இருந்து அமெரிக்காவுக்குக் கிடைக்கவில்லை.

இதனால் இப்போது புஷ் புது கதை கூறியுள்ளார். மேலும் ஈராக்கில் அடுத்த இரண்டு ஆண்டுகள் வரைஅமெரிக்கப் படைகள் தங்கியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X