ஈராக்கிய துணைப் பிரதமர் சரணடைந்தார்
கத்தார்:
ஈராககிய துணைப் பிரதமரும், அதிகாரத்தில் அதிபர் சதாம் ஹூசேனுக்கு அடுத்த நிலையில் இருந்தவருமானதாரிக் அஜீஸ் அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்துள்ளார். அதே போல ஈராக்கிய உளவுப் பிரிவுத் தலைவரானபரூக் ஹிஜாசி அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டார்.
கிருஸ்துவரான இவர் தனது பெயரை முஸ்லீம் பெயராக வைத்துக் கொண்டவர். கடந்த 15 ஆண்டுகளில்வெளியுலகுக்கு பழக்கமான ஒரே ஈராக்கிய அமைச்சரும் அவர் தான். சமீபகாலமாக இவரை சதாம் ஹூசேனின்ஒதுக்கியே வைத்திருந்தார்.
அவர் நேற்றிரவு அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார். அவர் இப்போது பாக்தாதில் அமெரிக்கப் படைகளின்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் 55 முக்கிய தேடப்படுவோர் பட்டியலில் இவர் 43வது இடத்தில் இருந்தார்.
பேரழிவு ஆயுதங்கள் எங்கே?:
இந்த ஆயுதங்களை அழிப்பதாகக் கூறிக் கொண்டு தான் ஈராக்கை அமெரிக்கா தாக்கியது. ஆனால், இன்று வரைஒரு ரசாயன, அணு, உயிரியல் ஆயுதம் கூட ஈராக்கில் இருந்து அமெரிக்காவுக்குக் கிடைக்கவில்லை.
இதனால் இப்போது புஷ் புது கதை கூறியுள்ளார். மேலும் ஈராக்கில் அடுத்த இரண்டு ஆண்டுகள் வரைஅமெரிக்கப் படைகள் தங்கியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications