ராணி மேரி கல்லூரியை இடிக்க தடை எதிரொலி: டெல்லியில் தமிழக அதிகாரிகள் முகாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராணி மேரி கல்லூரியை இடிக்கத் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவைத் திரும்பப்பெறும் முயற்சியில் முதல்வர் ஜெயலலிதா தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் மற்றும் சுற்றுச் சூழல் துறைசெயலாளர் இளங்கோவன் ஆகியோரை டெல்லிக்கு அனுப்பியுள்ளார் ஜெயலலிதா.

கடலோரப் பகுதிகளில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கட்டடங்களை இடிப்பதற்குத் தடை விதித்துமத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டது.

மேலும் கடற்கரை அருகே ரூ.5 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் கட்டடங்கள் கட்டுவதற்குஅமைச்சகத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

இதனால் சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியையும் இடிக்க வேண்டும்என்றாலோ, அங்கு தமிழக அரசின் தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டும் என்றாலோ சுற்றுச்சூழல் துணை அமைச்சகத்தின் முன் அனுமதியைப் பெற வேண்டிய நிலைக்குத் தமிழக அரசுதள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்தப் புதிய உத்தரவைத் திரும்பப் பெறும் முயற்சியில் ஜெயலலிதாதீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக மத்திய அரசுடன் பேசுவதற்காக லட்சுமி பிரானேஷ் அவசர அவசரமாக டெல்லிக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்பாகவே இளங்கோவன் டெல்லி சென்று சேர்ந்துள்ளார்.

திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலுதான் மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சராக உள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+