தினகரன் எம்.பி. பதவி காலியாகுமா?
சென்னை:
சசிகலாவின் அக்காள் மகன் தினகரனின் எம்.பி. பதவியைப் பறிக்கக் கோரி ஜனதா கட்சித் தலைவர்சுப்பிரமணியம் சுவாமி தொடப்ந்த வழக்கு விசாரணை முடிவடைந்துவிட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தினகரன் ஏராளமான முதலீடுகளைச் செய்துள்ளார். இது குறித்த கேள்வி எழுந்தபோது, தான் ஒருசிங்கப்பூர் பிரஜை என்றும் அந்த நாட்டின் நிரந்தரக் குடியுரிமை பெற்றவன் என்றும் கூறித் தப்பித்தார்.
இந் நிலையில் பெரியகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.பியானார். சிங்கப்பூர் பிரஜையானஇவர் எப்படி இந்தியாவில் எம்.பியாக முடியும் என்று கேட்டு சுவாமி உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இதில் சுவாமி ஆஜராகி வாதாடுகையில்,
சிங்கப்பூர் பிரஜையான இவர் இந்தியாவில் தேர்தலில் போட்டியிட்டது சட்ட விரோதாமானது. இது மிகப் பெரியகிரிமினல் குற்றமாகும். தான் ஒரு சிங்கப்பூர் பிரஜை என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கானஆதாரமும் உள்ளது. இதனால் அவரது எம்.பி. பதவியைப் பறிக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
தீர்ப்பு பாதகமாக வந்தால் தினகரனின் எம்.பி. பதவி பறிக்கப்படும்.
-->