வேலூரில் 2 சகோதரர்களுக்கு சார்ஸ் நோய்
வேலூர்:
வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சார்ஸ் நோய் அறிகுறிகளுடன் 2 சகோதரர்கள்சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் முதல் முறையாக இப்போதுதான் சார்ஸ் நோய் பரவியுள்ளது.இதனால் தமிழகத்திலும் சார்ஸ் பீதி ஏற்பட்டுள்ளது.
வேலூர் அருகே உள்ள சந்தவாசலைச் சேர்ந்த ஏழுமலை (37) என்பவர் சமீபத்தில் மலேசியாவில்இருந்து சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 15 ஆண்டுகளாக மலேசியாவில் இவர் டிரைவராகப் பணியாற்றிவருகிறார்.
கடந்த 15 நாட்களுக்கு முன் வேலூர் திரும்பிய ஏழுமலைக்கு திடீரென்று உடல் நிலைபாதிக்கப்பட்டது. கடும் காய்ச்சலுடன் அவர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தொடர்ந்து அவரது சகோதரர் சந்திரனின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துஅவரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர்களுக்கு பல சோதனைகளும் நடத்தப்பட்டன. இதில் இருவருக்கும் சார்ஸ் நோய்க்கானஅறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனித் தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுவைக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மருத்துவமனையில் சார்ஸ் நோய் தாக்குதலை உறுதி செய்யும் சோதனைகள்நடத்துவதற்கான வசதிகள் ஏதும் இல்லை. இதனால் இந்த சகோதரர்களின் ரத்த சாம்பிள்கள்பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந் நிலையில் சந்தவாசலில் உள்ள இந்த சகோதரர்களின் வீட்டில் வேறு யாருக்காவது சார்ஸ் நோய்தாக்குதல் இருக்கிறதா என்பதைக் கண்டறிய மருத்துவர்கள் குழு வேலூர் மருத்துவமனையில்இருந்து கிளம்பிச் சென்றுள்ளது.
இதனால் வேலூரில் பெரும் பீதி கிளம்பியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications