For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாயில் கறுப்பு துணி கட்டி மருத்துவ மாணவர்கள் 4வது நாள் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தங்கள் போராட்டத்தைக் கைவிட மருத்துவக் கல்லூரி மாணவர்கள்மறுத்துவிட்டனர். அவர்களது வேலை நிறுத்தமும் வகுப்புப் புறக்கணிப்பும் நான்காவது நாளை எட்டியுள்ளது.

இன்று அவர்கள் வாயில் கறுப்புத் துணி கட்டி போராட்டம் நடத்தினர்.

இதனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் அவுட்-பேசன்ட் எனப்படும் புறநோயாளிகள் தொடர்ந்து சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது, இந்திய மருத்துவக் கவுன்சில்அங்கீகாரம் பெறாத படிப்புகளுக்கு விரைவில் அங்கீகாரம் பெற்றுத் தர வேண்டும், மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும், கட்டண உயர்வை வாபஸ்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடந்துவருகிறது.

போராட்டத்தைக் கைவிட்டால் அவர்களுடன் பேச்சு நடத்த அரசு தயாராக இருப்பதாக நலத்துறைஅமைச்சர் செம்மலை கூறியிருந்தார். ஆனால், அதை மாணவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

இன்றும் சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய நகரங்களில் மருத்துவக் கல்லூரிமாணவர்கள் கண்டன ஆர்பாட்டமும் பேரணியும் நடத்தினர்.

இவர்கள் வாயில் கறுப்புப் பட்டை அணந்து போராட்டம் நடத்தினர். இவர்களுடன் பல் மருத்துவக்கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X