For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நகைக் கடை அதிபரிடம் கொள்ளையடித்த கார் டிரைவரை சுட்டுப் பிடிக்க உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் திருச்சியைச் சேர்ந்த நகைக் கடை அதிபரிடமிருந்து ரூ.1.2 கோடி மதிப்புள்ளநகைகளைக் கொள்ளையடித்த அவருடைய நண்பரின் கார் டிரைவரைச் சுட்டுப் பிடிக்கஉத்தரவிடப்பட்டுள்ளது.

திருச்சியில் ஜூவல் கார்டன் என்ற நகைக் கடையை நடத்தி வரும் சுபாஷ் சந்திர ஜெயின் நகைகள்வாங்குவதற்காக சென்னை வந்திருந்தார். தங்கம் மற்றும் வைர நகைகளை வாங்கிய ஜெயின் நேற்றுமுன்தினம் இரவு திருச்சிக்குக் கிளம்பினார்.

அப்போது அவரை ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வதுபோல் நடித்து வேறு இடத்திற்குஅழைத்துச் சென்றார் ஒரு கார் டிரைவர். இதை அறிந்த ஜெயின் சத்தம் போட்டார். ஆனால் அவரைக்கார் டிரைவர் கத்தியைக் காட்டி மிரட்டி அடக்கினார்.

பின்னர் பள்ளிக்கரணை அருகே ஜெயினைக் காரில் இருந்து இறக்கித் தள்ளி விட்ட அந்த டிரைவர்,நகைகள் இருந்த சூட்கேசுடன் காரில் ஏறித் தப்பினார்.

இதையடுத்து போலீசாருக்கு ஜெயின் தகவல் தெரிவித்தார். காரில் இருந்து தள்ளி விடப்பட்டதால்பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அப்போது போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், ரூ.1.25 கோடி மதிப்புள்ள நகைகளைஅந்த டிரைவர் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார் என்றும் அவருடன் வேறு சிலர் இருந்ததாகவும்ஜெயின் தெரிவித்தார்.

மேலும் அந்தக் கார் டிரைவரின் பெயர் சீதாராமன் என்றும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து தனிப் படைப் போலீசார் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் இன்று அதிகாலை உளுந்தூர்பேட்டை அருகேகண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை சுற்று வட்டாரத்தில் போலீசார் தீவிர வேட்டை நடத்திவருகின்றனர். கொள்ளையர்களைச் சுட்டுப் பிடிக்கவும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X