விழுப்புரம் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதல்: 4 பேர் பலி
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே லாரியும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
பாண்டிச்சேரியில் உள்ள கரசூர் குளிர்பான நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு மினி லாரிஉளுந்தூர்பேட்டையிலிருந்து பாண்டிச்சேரிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தது.
அப்போது விழுப்புரம் அருகே ஆந்திர லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. அதன்டிரைவரும் கிளீனரும் கீழே இறங்கி நின்று கொண்டிருந்தனர். அந்தப் பக்கமாக வேகமாக வந்த மினிலாரி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
மேலும் எதிரே வந்து கொண்டிருந்த சோப் ஆயில் லாரி மீதும் மினி லாரி நேருக்கு நேர் மோதியது.பின்னர் அருகிலிருந்த ஒரு பனை மரத்தில் மோதி மினி லாரி நின்றது.
இவ்விபத்தில் குளிர்பான நிறுவன உரிமையாளர் செல்வராஜ் மற்றும் தொழிலாளி ஆறுமுகம்ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஆந்திர லாரியின் டிரைவர்வெங்கடேஸ்வர ராவ் மற்றும் கிளீனர் கிருஷ்ணா ஆகியோரும் பின்னர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.
மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்தவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம்போலீசார் இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications