For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

200 ஈராக் போர்க் கைதிகளை விடுவித்தது அமெரிக்கா

By Staff
Google Oneindia Tamil News

பாக்தாத்:

சமீபத்தில் நடந்த ஈராக் போரின்போது கைது செய்யப்பட்ட 200 ஈராக் போர்க் கைதிகளைஅமெரிக்க படையினர் விடுவித்துள்ளனர்.

உம் காசிர் நகரில் உள்ள அமெரிக்கப் படையினர் முகாமில் வைக்கப்பட்டிருந்த 200 போர்க்கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 37 நாட்களாகப் போர்க் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அவர்கள் தங்கள் ஊர்களை நோக்கித்திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் சுமார் 5,800 ஈராக் போர்க் கைதிகள் அமெரிக்கப் படையினர் வசம் உள்ளனர். அவர்கள்படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

தலைமை ஆயுதக் கண்காணிப்பாளர் கைது:

இதற்கிடையே ஈராக் தலைமை ஆயுதக் கண்காணிப்பாளரான ஜெனரல் ஹோசாம் முகமது அமின்என்பவரை அமெரிக்கப் படையினர் பிடித்துள்ளனர்.

அமெரிக்காவால் தேடப்படுவோர் பட்டியலில் அமின் பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் எங்காவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இவருக்குநன்றாகத் தெரியும். எனவே இவர் தற்போது பிடிபட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படுகிறது.

சதாம்-ஒசாமா இடையே நெருங்கிய தொடர்பு?

இதற்கிடையே முன்னாள் ஈராக் அதிபர் சதாம் ஹூசேனுக்கும் சர்வதேசத் தீவிரவாதி ஒசாமா பின்லேடனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

உளவுத் துறை வட்டாரங்கள் மூலம் இவ்விவரம் தெரிய வந்துள்ளதாக லண்டனில் வெளியாகும்"டெய்லி டெலிகிராப்" பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X