உலகம் முழுவதும் இதுவரை 332 பேர் பலி
பெய்ஜிங்:
சார்ஸ் நோய்க்கு உலகம் முழுவதும் இதுவரை 332 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் மட்டும் 139பேர் இறந்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் சார்ஸ் நோய் சீனாவில்தான் தோன்றியதாகக் கருதப்படுகிறது.இந்நோய் குறித்த தகவல்களை ஆரம்பத்திலேயே சீனா தெரிவிக்க மறுத்து விட்டதால் இதுபடிப்படியாக பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.
சீனாவில் மட்டும் இதுவரை 139 பேர் இந்நோய்க்குப் பலியாகி விட்டதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 1,100 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்கூறப்படுகிறது.
ஆனால் பல மடங்கு குறைவாகவே இந்த எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
மேலும் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் மட்டும் சுமார் 8,000 பேர் சார்ஸ் நோய் காரணமாகத்தனியாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் ஹாங்காங்கிலும் சார்ஸ் நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 பேர் இங்கு இறந்துள்ளனர்.
இங்கு இதுவரை மொத்தம் 138 பேர் சார்ஸ் நோய்க்கு உயிரிழந்துள்ளனர். மேலும் 1,500 பேருக்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தைவானில் முதல் சார்ஸ் பலி:
இதற்கிடையே தைவானில் முதல் முறையாக சார்ஸ் நோய்க்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தாய்சங்க் நகரில் உள்ள மருத்துவமனையில்சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
இதையடுத்து சிங்கப்பூர், வியட்நாம், சீனா, ஹாங்காங் மற்றும் கனடாவிலிருந்து தைவானுக்குள்யாரும் வரக் கூடாது என அந்நாடு தடை விதித்துள்ளது.
இதற்கிடையே சார்ஸ் நோய் பரவுவதைத் தீவிரமாகத் தடுப்பதற்குத் தேவையான அனைத்துநடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
-->