13 ஈராக்கியர்களை சுட்டுக் கொன்ற அமெரிக்க படையினர்
பாக்தாத்:
ஈராக்கில் அமெரிக்க எதிர்ப்பு போராட்டம் நடத்திய 13 ஈராக்கியர்களை அமெரிக்கப் படையினர்சுட்டுக் கொன்றனர். மேலும் 75 பேர் படுகாயமடைந்தனர்.
அந்தப் போராட்டத்தை அமெரிக்கப் படையினர் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.ஈராக்கை விட்டு அமெரிக்கப் படையினர் வெளியேற வேண்டும் என்று போராட்டம்நடத்தியவர்கள் அப்போது கோஷங்களை எழுப்பினார்கள்.
அப்போது திடீரென 2 பேர் அமெரிக்கப் படையினரை நோக்கித் துப்பாக்கியால் சராமாரியாகச் சுடஆரம்பித்தனர். இதனால் அதிர்ந்து போன அமெரிக்கப் படையினர் உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை நோக்கி அமெரிக்கப் படையினர் சுட ஆரம்பித்தனர்.இதில் 13 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 75 பேர் குண்டுக் காயம் அடைந்தனர்.
சதாமின் மற்றொரு அமைச்சர் சரண்:
இதற்கிடையே சதாம் ஹூசேன் அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த அமிர்ரஷீத் முகமது அல்-உபய்தி அமெரிக்கப் படையினரிடம் சரணடைந்தார்.
சதாம் உள்பட அமெரிக்காவின் தேடப்படுவோர் பட்டியலில் 55 பேர் உள்ளனர். தற்போது ரஷீத்கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இதுவரை இந்தப் பட்டியலில் உள்ள 7 பேர் அமெரிக்கப்படையினரிடம் பிடிபட்டுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications