ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் நெடுமாறன் மீண்டும் மனு
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 6 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்துள்ளனர்.
இம்மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் இது தொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டது.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி நெடுமாறன்கைது செய்யப்பட்டார். இதையடுத்து தமிழர் தேசிய இயக்கப் பிரமுகர்களான சுப வீரபாண்டியன்,டாக்டர் தாயப்பன், பாவாணன் உள்ளிட்ட 5 பேர் ஆகியோரும் பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்கள் 6 பேரும்உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் பொடா நீதிமன்றத்திலேயே அவர்கள் ஜாமீன்கேட்கலாம் என்று கூறி உயர் நீதிமன்றம் அம்மனுவைத் தள்ளுபடி செய்து விட்டது.
இதையடுத்து தங்களை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு சென்னை பூந்தமல்லியில் உள்ள பொடாசிறப்பு நீதிமன்றத்தில் 6 பேரும் மனு தாக்கல் செய்தனர்.
ஆனால் அவர்களுடைய ஜாமீன் மனுவை பொடா நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன் நிராகரித்துவிட்டார். அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தால் சாட்சிகளை கலைத்து விடக் கூடும் என்பதால்ஜாமீன் அளிக்க முடியாது என்றும் நீதிபதி ராஜேந்திரன் கூறினார்.
இதைத் தொடர்ந்து நெடுமாறன் உள்ளிட்ட 6 பேரும் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் தங்களுக்குஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று நீதிபதி தினகர் மற்றும் நீதிபதிஅசோக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டனர். மேலும் கோடை விடுமுறைக்குப் பின்னர் இந்த மனு மீதான விசாரணைநடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
-->