ராமதாஸுக்கு கருணாநிதி வக்காலத்து வாங்குவதா?- திருமாவளவன் ஆவேசம்
சென்னை:
"எல்லாமே வன்னியர்களுக்குத்தான் கிடைக்க வேண்டும் என்ற ஜாதி உணர்வுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ர ாமதாஸ். அவருக்கு திமுக தலைவர் கருணாநிதிவக்காலத்து வாங்குவது தவறு என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஒரு வன்னியர்தான் முதல்வராக, தலைமைச் செயலாளராக, உள்துறைஅமைச்சராக வர வேண்டும் என குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டுமே மனதில் கொண்டு ஜாதிஉணர்வோடு கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் ராமதாஸ்.
இப்படிப்பட்டவரைக் கொண்டுள்ள திமுக கூட்டணியில் சேர்ந்து செயல்பட எங்களது மனசாட்சிஇடம் கொடுக்கவில்லை. அதனால்தான் பொடா குறித்த போராட்டத்தில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை.
ஆனாலும் எங்களது தார்மீக ஆதரவு எப்போதுமே கருணாநிதிக்கு உண்டு. ராமதாஸ் கலந்துகொள்ளாமல், திமுக நடத்தும் போராட்டங்களில் நாங்கள் கண்டிப்பாக கலந்து கொள்வோம்.
ஜாதி வெறியுடன் இருக்கும் ராமதாஸுக்கு, கருணாநிதி வக்காலத்து வாங்குவது நியாயமானசெயலாக இல்லை என்றார் திருமாவளவன்.
-->