காய்ச்சலில் சிக்கிய கிராமம்: சார்ஸ் பரவியதாக வதந்தி

Subscribe to Oneindia Tamil

கலவை:

வேலூர் மாவட்டத்தில் உள்ள கலவையையடுத்து ஒரு கிராமத்தில் 43 பேருக்கு கடுமையான விஷக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கப்பூரில் பணிபுரியும் ஏழுமலைக்கு சார்ஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு வேலூர்சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை தரப்பட்டது. இதனால் வேலூர் மாவட்டம் முழுவதுமே சார்ஸ் நோய் பயம் பரவிக் கிடக்கிறது.

இந் நிலையில் வேலூர் கலவை பகுதியை அடுத்த அள்ளாளச் சேரி கிராமத்தில் கடும் காய்ச்சல் பரவியுள்ளது. கடந்த இரு நாட்களாக இந்தஊரில் இந்த நோய் பரவி வருகிறது. இதுவரை 43 பேரைத் தாக்கியுள்ளது.

நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடும் காய்ச்சலும், உடல் நடுக்கமும் ஏற்பட்டுள்ளது. ஊரையே ஒட்டுமொத்தமாக நோய் தாக்கியதைஅறிந்த வேலூர் மாவட்ட நிர்வாகம் அங்கும் மருத்துவக் குழுவை அனுப்பி வைத்தது.

அவர்கள் வீடு வீடாக பரிசோதனை நடத்தினர். இதில் மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த 9 பேரை உடனே மருத்துவமனையில்அனுமதித்தனர். இதில் 8 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்த ஊரில் சார்ஸ் பரவிவிட்டதாக பெரும் வதந்தி கிளம்பியது. ஆனால், இவர்களுக்கு சாதாரண காய்ச்சல் தான் ஏற்பட்டுள்ளதாகமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊரின் குடிநீர்த் தொட்டியில் ஏற்பட்ட அசுத்தத்தால் நோய் பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து அந்தத் தொட்டியைஅதிகாரிகள் சுத்தம் செய்ய உத்தரவிட்டனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+