நகை கடை அதிபரிடம் ரூ. 1.25 கோடி கொள்ளை: 2 சகோதரிகள் கைது- சகோதரன் தலைமறைவு
சென்னை:
திருச்சியைச் சேர்ந்த நகைக் கடை அதிபரிடம் ரூ. 1.25 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டசம்பவத்தில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சியில் நகைக் கடை வைத்திருப்பவர் சுபாஷ் சந்த் ஜெயின். இவர் சென்னை வந்து நகைகள் வாங்கிச் சென்றுவிற்பனை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த அவர் ரூ.1.25 கோடிக்கு நகைகளைவாங்கினார்.
சென்னை வரும்போது அங்கு நகைக் கடை வைத்திருக்கும் தனது நண்பரின் காரை அவர் பயன்படுத்துவார்.நண்பரின் கார் டிரைவர் சீதாராமன் தான் ஜெயினுக்காக காரை ஓட்டிச் செல்வார்.
அதே போல இந்த முறையும் சீதாராமன் காரை ஓட்ட பல கடைகளுக்குச் சென்று ஜெயின் நகைகளை வாங்கினார்.பின்னர், திருச்சி திரும்புவதற்காக எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தார்.
வேளச்சேரி அருகே சென்றபோது காரை டிரைவர் சீதாராமன் நிறுத்தினர். உடனே காரைச் சுற்றி சிலர் சூழ்ந்தனர்.
அவர்களுடன் சேர்ந்து ஜெயினை சீதாராமன் தாக்கினார். பின்னர் ஜெயினை கீழே தள்ளி விட்டு விட்டுநகைகளுடன் சீதாராமனும் பிறரும் தப்பிச் சென்றார்.
இந்த கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.முதலில் தேசிய நெடுஞ்சாலையில் அநாதையாக விடப்பட்ட கார் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து சீதாராமனின் சொந்த ஊரான திருப்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் உறவினர் வீடுகளில் போலீஸார்விசாரணை நடத்தினர். சோதனையும் நடத்தினர்.
அப்போது சீதாராமனின் சகோதரிகளான பானுமதி மற்றும் மீனா ஆகியோரின் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டநகைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து அவற்றை மீட்டனர்.
இதைத் தொடர்ந்து இரு சகோதரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீதாராமனும் மற்றும் அவனது கூட்டாளிகளும் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளனர். அவர்களைத் தேடும் பணிதொடர்கிறது.
-->












Click it and Unblock the Notifications