சாலையோர குடிசை வீட்டுக்குள் லாரி புகுந்தது: பெண், குழந்தை பலி
திருச்சி:
திருச்சி அருகே தறிகெட்டு ஓடிய லாரி சாலையோரத்தில் இருந்த குடிசை வீட்டுக்குள் புகுந்ததில்அந்த வீட்டில் இருந்த ஒரு பெண்ணும் அவருடைய குழந்தையும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
திருச்செங்கோட்டிலிருந்து கறிக் கோழிகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி திருச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த கொடியம்பாளையும் கிராமம் அருகே நேற்று இரவுசென்று கொண்டிருந்தபோது லாரியின் டிரைவர் திடீரென்று தன் கட்டுப்பாட்டை இழந்தார்.இதையடுத்து தறிகெட்டு ஓடிய லாரி சாலையோரத்தில் இருந்த ஒரு குடிசை வீட்டுக்குள் மோதிகவிழ்ந்தது.
இவ்விபத்தில் அந்த வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணும் அவருடைய குழந்தையும் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் அந்தப் பெண்ணின் கணவரும் மற்றொரு உறவினரும் பலத்த காயம் அடைந்தனர்.அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லாரி மீது பஸ் மோதி 2 பேர் பலி:
இதற்கிடையே ராமநாதபுரம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீது அரசு பஸ் ஒன்றுபின்பக்கமாக வந்து மோதியதில் 2 பயணிகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ராமநாதபுரத்தை அடுத்துள்ள ஒரு சோதனைச் சாவடி அருகே ஒரு லாரி நின்று கொண்டிருந்தது.அப்போது ராமநாதபுரத்திலிருந்து சென்று கொண்டிருந்த ஒரு அரசு பஸ் எதிர்பாராத விதமாக அந்தலாரியின் மீது வேகமாக மோதியது. இதில் பஸ்சின் இடது பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது.
இதனால் பஸ்சில் சென்று கொண்டிருந்த 2 பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்தவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இரு விபத்துகள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->