For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மே 8ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி.

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

GSLVஜிசாட்-2 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி.-டி2 ராக்கெட் வரும் 8ம் தேதிவிண்ணில் பறக்க உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்துஜி.எஸ்.எல்.வி.-டி2 ராக்கெட் ஏவப்பட உள்ளது.

இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்துவிட்டால் இனி தொலைத் தொடர்பு செயற்கைக்கோள்களை இந்தியாவே விண்ணில் செலுத்தும் நிலை ஏற்பட்டுவிடும். பிரான்சின் ஏரியன் ராக்கெட்அல்லது அமெரிக்க ராக்கெட்டுகளை எதிர்பார்த்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஒரு செயற்கைக் கோள் தொலைத் தொடர்புக்கு (டி.வி. ரேடியோ, தொலைபேசி போன்றவற்றின்செயல்பாட்டுக்கு) பயன்பட வேண்டுமென்றால் அதை பூமியில் இருந்து 36,000 கி.மீ. உயரத்தில்செலுத்தியாக வேண்டும். இத்தனை சக்தி மிக்க ராக்கெட்டை திட எரிபொருளைக் கொண்டு ஏவமுடியாது. திரவ எரிபொருளாலும் ஏவ முடியாது.

இதனால் இத்தனை காலம் இந்தியா தடுமாறி வந்தது. இந்தியாவின் எஸ்.எல்.வி. வகைராக்கெட்டுகள் திட எரிபொருளால் இயங்குவவை. ஏ.எஸ்.எல்.வி. மற்றும் பி.எஸ்.எல்.வி.ஆகியவை திட மற்றும் திரவ எரிபொருளால் பறப்பவை.

ஜி.எஸ்.எல்.வியை ஏவ திரவ நிலையில் இருக்கும் ஹைட்ரஜன், ஆக்ஜிசன் வாயு எரிபொருள்தேவைப்பட்டது. இந்த எரிபொருளைக் கொண்டு இயங்க கிரையோஜெனிக் ராக்கெட் என்ஜின்கள்தேவைப்பட்டன.

இந்த கிரையோஜெனிக் என்ஜின்களை இந்தியாவுக்குத் தர ரஷ்யா முன் வந்தது. ஆனால், அதைஅமெரிக்கா தடுத்துவிட்டது. இதையடுத்து இந்தியாவே கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்பில்ஈடுபட்டுள்ளது.

இந் நிலையில் இந்தியாவுக்கு 7 கிரையோஜெனிக் என்ஜின்களை அமெரிக்காவையும் மீறி ரஷ்யாவழங்க முன் வந்தது. இதில் 3 என்ஜின்கள் இந்தியா வந்து சேர்ந்துவிட்டன. இதில் ஒரு என்ஜினைக்கொண்டு 2001ம் ஆண்டில் முதலில் ஒரு ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை இந்தியா விண்ணில்வெற்றிகரமாக செலுத்தி சோதனையிட்டது.

இப்போது இரண்டாவது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. மே9ம் தேதின் இந்த ராக்கெட்டைச் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு ஒருநாள்முன்பாகவே ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான "இஸ்ரோ"முடிவு செய்துள்ளது.

மே 8ம் தேதி மாலை 5.30 மணிக்கு ஜிசாட்-2 செயற்கைக்கோளை சுமந்து கொண்டுஜி.எஸ்.எல்.வி.-டி2 ராக்கெட் விண்ணில் பாயும் என "இஸ்ரோ" அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

இந்தியாவில் உருவாக்கப்பட்டு வரும் கிரையோஜெனிக் என்ஜின் வரும் 2005ம் ஆண்டுக்குள்தயாராகிவிடும் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X