கொடைக்கானலில் கன மழை: சுற்றுலா பயணிகள் கடும் அவதி
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
கொடைக்கானலில் அடை மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமம்ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.இதனால் கோடை வெப்பம் குறைந்து, குளுமை நிலவுகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் தொடர்ந்து 3வது நாளாக கன மழைபெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள குடகனாறு உள்ளிட்ட பல்வேறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கொடைக்கானலிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு சுற்றுலா வந்துள்ளபயணிகள், ஊரைச் சுற்றிப் பார்க்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அங்கு அதிகபட்சமாக 3 செமீ மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications