காய்ச்சலுக்கு 2 பேர் சாவு: திருச்சியில் சார்ஸ் பீதி
திருச்சி:
திருச்சி அருகே 2 பேர் காய்ச்சலால் மரணமடைந்ததால், அங்கு சார்ஸ் நோய் பரவி விட்டதாகபொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.
ஆனால் மலேரியா காய்ச்சலால்தான் அவர்கள் இறந்துள்ளதாகவும் சார்ஸ் நோயால் சாகவில்லைஎன்றும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
திருச்சி மாவட்டம் வையம்பட்டி, கள்ளிக்காட்டுப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய கிராமங்களைச்சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், சென்னையில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சொந்தஊரில் திருவிழா நடப்பதையொட்டி அனைவரும் தங்களது கிராமங்களுக்கு வந்திருந்தனர்.
கள்ளிக்காட்டுப்பட்டி கிராமத்தில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு வந்திருந்த பலருக்குதிடீர் காய்ச்சல் ஏற்பட்டது. இதில் வெள்ளையன், மல்லிகா ஆகியோரது நிலைமை மிகவும்மோசமடைந்தது.
இதையடுத்து இருவரும் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சைபலனளிக்காமல் வெள்ளையன் இறந்தார். இதையடுத்து மல்லிகா திருச்சி அரசு மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
இவர்களைத் தவிர மேலும் நூற்றுக்கும் அதிகமான மக்களுக்கு கடுமையான காய்ச்சல்ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சார்ஸ் நோய் பரவி விட்டதாக பீதி கிளம்பியது.இதையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு மருத்துவர் குழு விரைந்தது.
கிராமத்தில் இருந்த அனைவருக்கும் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. காய்ச்சலால்இறந்தவர்களுக்கு சார்ஸ் இல்லை என்றும், சாதாரண மலேரியா காய்ச்சல் காரணமாகவேஅவர்கள் இறந்திருக்கிறார்கள் என்றும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும்அப்பகுதியில் சார்ஸ் பீதி குறையவில்லை.
-->