சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்: மருத்துவ மாணவர்கள் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் 13வது நாளை எட்டியுள்ள நிலையில் சாகும் வரைஉண்ணாவிரதப் போராட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் கடந்த மாதம் 23ம்தேதியிலிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இடையில் கடந்த 3ம் தேதி தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத்தொடர்ந்து அவர்களுடைய போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்களும் இன்று போராட்டத்தில் குதித்துள்ளனர்.இதனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும், எழும்பூர் குழந்தைகள் நலமருத்துவமனையிலும் நோயாளிகள் நீண்ட வரிசைகளில் சிகிச்சை பெறுவதற்காகக் காத்துக்கொண்டுள்ளனர்.

இவர்களுக்குச் சிகிச்சை அளிக்க ஒருசில மருத்துவர்கள் மட்டுமே இருப்பதால் உரிய நேரத்தில்சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே இன்று மதியம் முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் அறிவித்துள்ளனர்.

மொட்டை, நாமம், முக்காடு...

இந்நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் தலைகளில் முக்காடைப்போட்டுக் கொண்டு நூதனப் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டும்,நெற்றியில் பட்டை நாமம் தீட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளோ தங்கள்முகங்களில் கரியைப் பூசிக் கொண்டு போராட்டம் நடத்தினர்.

இதேபோல் திருச்சி மற்றும் கோயம்புத்தூரிலும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள்போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+