For Daily Alerts
Just In
மதுரையில் எய்ட்ஸ் நோய் கைதி சாவு
மதுரை:
கொலை வழக்கில் தண்டனை பெற்ற மதுரை சிறைக் கைதி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
மதுரை அருகே உள்ள பாலமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கொலை வழக்கில் கைதாகி 5 ஆண்டுசிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர். கடந்த 2001ம் ஆண்டு முதல் இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போனதால், ராஜேந்திரனுக்கு மதுரை அரசு மருத்துவமனையில்பசோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது அவர் உடம்பில் எச்.ஐ.வி. வைரஸ் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவருக்கு பாலியல் நோய்கள் பிரிவில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ராஜேந்திரன் நேற்று மரணமடைந்தார்.
Comments
Story first published: Monday, May 12, 2003, 5:30 [IST]