நாட்டின் முதல் பெண் கமாண்டோ படை: நாளை ஜெ. அறிமுகப்படுத்துகிறார்
சென்னை:
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பெண் கமாண்டோ படையை புதன்கிழமை முதல்வர் ஜெயலலிதாமுறைப்படி அறிமுகப்படுத்துகிறார்.
இந்தியாவில் ஆண் வீரர்களை மட்டுமே கொண்டதாக கமாண்டோ படைகள் உள்ளன. ஆனால் தமிழகத்தில், நாட்டிலேயே முதல் முறையாகபெண்களைக் கொண்டு அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
160 பெண் போலீஸார் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஆண்களுக்கு இணையான பயிற்சி கொடுக்கப்பட்டு கமாண்டோக்களாகஉருவாகியுள்ளனர். சாதாரண ஓட்டம் முதல் துப்பாக்கியால் சுடுவது, கராத்தோ உள்பட பல விதமான தாக்குதல் கலைகள், ஆயுதப்பயிற்சிகளில் புடம் போட்ட பிறகு இவர்கள் கமாண்டோக்களாக உருவெடுத்துள்ளனர்.
சமீபத்தில் தொடர் ஓட்டமாக இந்தப் பெண் கமாண்டோக்கள் கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு சென்னை வந்தனர். கிட்டத்தட்ட 700கி.மீ. தூரம் தொடர்ந்து ஓடி வந்து தங்களது உடல் வலுவை எடுத்துக் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.
இந்த கமாண்டோ படையின் செயல்பாடுகளை அதிகாரப்பூர்வமாக ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். நாளை மாலை 5.45 மணிக்கு ராஜாஅண்ணாமலைபுரத்தில் மருதம் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெண் கமாண்டோக்களின் தலைமை அலுவலகத்தில் தொடக்கவிழா நடக்கிறது.
விழாவில் முதல்வர் ஜெயலலிதா, டிஜிபி கோவிந்த், உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோதா ஆகியோர் கலந்துகொள்கின்றனர். பெண்கமாண்டோக்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.












Click it and Unblock the Notifications