இடி விழுந்த சப்தம் கேட்டு காது செவிடான பெண்!
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கன மழையின்போது இடி விழுந்த சப்தம் கேட்டு ஒரு இளம் பெண்ணின்காதுகள் செவிடாயின.
பாண்டிக் கண்மாய் அருகே உள்ள வணங்காநேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபைதா. இவருக்கு வயது 22.இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தனது மாமியாருடன் வசித்து வருகிறார்.
இந்த மாவட்டம் முழுவதிலும் இடியும், மின்னலுமாக கன மழை பெய்தது. இடி விழுந்த சப்தம் கேட்டு சுபைதாவுக்குகாதுகள் செவிடாகிவிட்டன. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவரது காதுகள் இனி கேட்காது என்று டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.












Click it and Unblock the Notifications