வைகோவுடன் பா.ஜ.க.தலைவர் ராதாகிருஷணன் சந்திப்பு
வேலூர்:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பா.ஜ.க. மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் இன்று சிறையில் சந்தித்துப்பேசினார்.
சமீபத்தில் மாநிலத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன் அதிமுக ஆதரவாளராவார். ஆனாலும்தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக அவர்சந்தித்துப் பேசினார்.
இந் நிலையில் இன்று வேலூர் சிறைக்குச் சென்ற அவர் வைகோவை சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம்இச் சந்திப்பு நீடித்தது. இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டது தவறு. அதே போல நக்கீரன் ஆசிரியர் கோபாலை இந்தச்சட்டத்தில் தமிழக அரசு கைது செய்ததையும் தவிர்த்திருக்கலாம். ஆனால், தமிழ்த் தீவிரவாதிகளை இந்தச்சட்டத்தில் அரசு உள்ளே தள்ளியிருப்பதை வரவேற்கிறேன்.
அதே நேரத்தில் மாநில அரசு நிர்வாகம் மற்றும் நீதித்துறைகளில் மத்திய அரசு தலையிடாது. இதனால் தான்வைகோ விஷயத்தில் மத்திய அரசு தலையிடவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications