பிளஸ் டூ: மார்க் குவித்த மயூரணி கொலையாளிகள்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Mayurni murdrers இலங்கை மாணவி மயூரணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் பாலபிரசன்னாவும், ஹாஜிஅலியும் பிளஸ் டூ தேர்வில் அருமையான மதிப்பெண்கள் பெற்று பள்ளிகளில் முதலிடங்களைப் பிடித்துள்ளனர்.

மதுரை அம்பிகா கல்லூரியில் படித்து வந்த மாணவி மயூரணி, தான் தங்கியிருந்த அம்பிகா கல்லூரி உரிமையாளர்சோலமலைத் தேவர் வீட்டில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவரைக் கொலை செய்ததாக சோலமலைத் தேவர், அவரது மனைவி ராக்கம்மாள், இலங்கை மாணவர் பாலபிரசன்னா, மதுரை மாணவர் ஹாஜி அலி, வாட்ச்மேன் வீரண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.

பாலபிரசன்னாவும், ஹாஜி அலியும் பிளஸ் டூ தேர்வு எழுதியிருந்தனர். இதில் இருவரும் நல்ல மதிப்பெண்கள்பெற்று தேறியுள்ளனர். பாலபிரசன்னா, வேதியியல் பாடத்தில்193 மதிப்பெண்களும், கணிதத்தில் 170மதிப்பெண்களும் பெற்று பள்ளியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மற்றொரு மாணவரான ஹாஜி அலி, கணிதத்தில்183ம், இயற்பியலில் 193 மதிப்பெண்களும் பெற்றுபள்ளியிலேயே இரண்டாவது இடத்தில் தேறியுள்ளார். இருவரும் நுழைவுத் தேர்வும் எழுதியுள்ளனர்.

ஆனால், தற்போது கொலை வழக்கில் கைதாகியுள்ளதால் இவர்களால் மேல் படிப்பு படிக்க முடியுமா என்பதுகேள்விக்குறியாகியுள்ளது.

குணத்தில் ஜீரோவாக திகழும் இவர்கள் படிப்பில் ஹீரோக்களாகியுள்ளது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+