21ம் தேதி ஸ்டிரைக்: வங்கிகள், தொலைத் தொடர்பு, அரசு அலுவலகங்கள் இயங்காது- டாக்டர்களும் போராட்டம்
சென்னை:
வரும் 21ம் தேதி தமிழகம் உள்பட நாடு முழுவதும் அனைத்துத் தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
இதனால் வங்கிகள், மத்திய- மாநில அரசு அலுவலகங்கள், தொலைத் தொடர்பு, தபால் துறை, இன்சூரன்ஸ்நிறுவனங்கள், அணுமின்துறை, துறைமுகங்களின் ஊழியர்களும், ஆட்டோ, வேன் டிரைவர்களும்பங்கேற்கின்றனர். இதனால் இந்தத் துறைகள் இயங்காது. ஆட்டோ, வேன் ஓடாது. மேலும் தொழிலாளர்கள்பணிக்கு வராமல் புறக்கணித்தால் பஸ், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்படும். ஜவுளி ஆலைகள் உள்பட பலதனியார் நிறுவனங்களின் செயல்பாடும் ஸ்தம்பிக்கவுள்ளது.
மேலும் மாநிலம் முழுவதும் அன்றைய தினம் பஸ், ரயில் மறியல் போராட்டங்களை நடத்தவும் விவசாயிகள்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இதே தினத்தில் இருந்து தான் டாக்டர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
மத்திய, மாநில அரசுகளின் தனியார்மயக் கொள்கை, லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைதனியாருக்கு விற்பது, பி.எப். வட்டியைக் குறைத்தது, போனஸ் தொடர்பான விதிகளைக் கடுமையாக்கியதுஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களும் 21ம் தேதி இந்தப் போராட்டத்தைநடத்துகின்றன.
இதில் தமிழகத்தில் மட்டும் 10 லட்சம் மத்திய, மாநில அரசு ஊழியர்களும் 10 லட்சம் தனியார் துறை ஊழியர்களும்தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபடுவர் என சி.ஐ.டி.யு. மாநிலச் செயலாளர் ரங்கராஜன் தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது, அமைப்பு சாரா ஊழியர்களும் இதில் முழுஅளவில் ஈடுபடுவர். இதனால் மத்திய, மாநில அரசு அலுவலங்கள் இயங்காது. வங்கிகள் செயல்படாது.இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூடப்படும். ஆட்டோக்கள் ஓடாது. வேன்கள் ஓடாது என்றார்.
இந்தப் போராட்டத்தை அடக்குமுறை மூலம் நசுக்க அரசு நினைத்தால் அதனால் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டுபோராட்டம் தான் தீவிரமாகும் என்றும் எச்சரித்தார்.
ஆட்டோ சங்கங்கள் பங்கேற்பு:
21ம் தேதி இந்தப் போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆட்டோ சங்கங்களும் பங்கேற்கப் போவதாகஅறிவித்துள்ளன. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும்ஆட்டோ டிரைவர்கள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications