அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் திடீர் வாபஸ்!
சென்னை:
தமிழக அரசு டாக்டர்கள் நாளை முதல் மேற்கொள்வதாக இருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டம் திடீரன்று விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக காலவரையற்றபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவாக அரசு டாக்டர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளை முதல்காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
இந் நிலையில் திடீரென்று அரசு டாக்டர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சங்கத் தலைவர் டாக்டர் பிரகாசம் வெளியிட்டுள்ளஅறிக்கையில்,
வேலைநிறுத்தம் நடந்தால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள், பொதுமக்களுக்கு இடையூறுஏற்படும் என்பதால், மக்கள் நலம் கருதி இந்தப் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக கூறியுள்ளார்.
அரசு டாக்டர்கள் திடீரென்று போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளது மருத்துவக் கல்லூரிமாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதற்கிடையே, டாக்டர்கள் ஸ்டிரைக்கிற்கு பல்வேறு மாவட்டங்களில் சரியான ஆதரவுகிடைக்கவில்லையென்று தெரிகிறது. வேலை நிறுத்தம் செய்தால் வேலை பறிபோகும் நிலைஏற்பட்டதால் பல டாக்டர்களும் அதற்குத் தயாராக இல்லை.
மேலும் ஸ்டிரைக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளதால், அந்தவழக்கில் தங்களுக்கு சாதகமான நிலை ஏற்படாது என்பதை உணர்ந்தும்தான், போராட்டத்தை வாபஸ்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
நோயாளிகள் தரப்பில் பெரும் பாதிப்பு ஏற்பட்டால், அது தங்களுக்கு எதிராகவே திரும்பும் என்றுபல டாக்டர்கள் அச்சம் தெரிவித்ததாகவும், இதனால் தாங்கள் ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அவர்கள் முடிவெடுத்த காரணத்தால், வேறு வழியின்றி ஸ்டிரைக்கை வாபஸ்பெறுவது என்ற முடிவுக்கு டாக்டர்கள் சங்கம் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, டாக்டர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றாலும் கூட தொடர்ந்து போராடப்போவதாக மாணவர்கள் சங்கத் துணைத் தலைவர் காரல் தெரிவித்துள்ளார்.
டாக்டர்கள் முடிவு அதிர்ச்சி தருகிறது. இருப்பினும் எங்களது போராட்டம் இறுதி வரை தொடரும்.கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஓய மாட்டோம் என்று கூறியுள்ளார் அவர்.