மூதாட்டியை கழுத்தை நெறித்து கொன்று நகைகள் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோயம்புத்தூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொன்று 30 பவுன் தங்க நகைகள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி ராஜம். காலையில்ரத்தினம் வெளியே சென்று விட்டார். அப்போது ராஜத்தின் வீட்டிற்கு வந்த சிலர் அட்ரஸ் கேட்பதுபோல வீட்டுக்குள் நுழைந்தனர்.
தனியே இருந்த அவரை கழுத்தை நெரித்துக் கொன்றனர். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த சங்கிலி,உள்பட வீட்டில் இருந்த 30 பவுன் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிவிட்டனர்.
இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பகல் வேலைகளில் வீட்டில்மூதாட்டி மட்டும் தனியே இருப்பதை நெடுநாட்களாக நோட்டம் பார்த்து வந்த கும்பல் தான் இதைச்செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications