For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பதவி விலக மாட்டேன்: செஞ்சி ராமச்சந்திரன் திட்டவட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை & டெல்லி:

தனது உதவியாளர் ரூ. 4 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுவதில் தனக்கு எந்தவித சம்பந்தமும்இல்லை என்று கூறியுள்ள மத்திய நிதித்துறை இணையமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், இதற்காகபதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் திட்டவட்டமாத் தெரிவித்தார்.

வருமான வரித்துறை அதிகாரி ஒருவரின் இடமாற்றத்திற்காக ரூ. 4 லட்சம் லஞ்சம் பெற்றதாகசெஞ்சி ராமச்சந்திரனின் உதவியாளர் பெருமாள்சாமி என்ற பாபு கைது செய்யப்பட்டுள்ளர்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக சென்னைஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தியும் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பதவி விலகுமாறுஇவருக்கு பிரதமர் வாஜ்பாய் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில்..

இந் நிலையில் தனக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று செஞ்சி ராமச்சந்திரன்கூறியுள்ளார். சென்னையிலிருந்து இன்று காலை அவசரமாக டெல்லி புறப்பட்ட அவர் மீனம்பாக்கம்விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில், நான் எக்காரணம் கொண்டும் பதவி விலக மாட்டேன்.

இந்த லஞ்சப் புகாரில் மதிமுகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அதே போல கைது செய்யப்பட்டுள்ள சென்னைஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தியையும் எனக்குத் தெரியாது. லஞ்சம் வாங்கப்பட்டது குறித்து நேற்று மாலை தான்எனக்கே தெரியும் என்றார்.

டெல்லியில்...

டெல்லி வந்திறங்கிய ராமச்சந்திரன் அங்கு விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில், இதில் எனக்கு எந்தச் சம்பந்தமும்இல்லை. என் மனசாட்சிப்படி நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இதனால் நான் பதவி விலக மாட்டேன். இது குறித்து என்னிடம்பிரதமர் ஏதும் பேசவில்லை. நான் அவருடன் பேசவில்லை.

பெருமாள்சாமி என்னுடைய அரசியல் உதவியாளர். அவருக்கும் எனது துறைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்றார்.

அறிக்கையில்...

முன்னதாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த விஷயத்தில் சட்டம் தனது கடமையை செய்யும். எனக்கும், இதற்கும்எந்தவித சம்பந்தமும் இல்லை. தவறு செய்த எனது உதவியாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

இது அரசியல் ரீதியில் பழிவாங்க நடந்துள்ள மோசடி. பொது வாழ்வில் தூய்மையைக் கடைபிடிப்பதில் நான் தீவிரமாக உள்ளவன் என்றுகூறியிருந்தார்.

ஆனால், மத்திய அமைச்சர் ராமச்சந்திரன் மட்டுமே பார்க்க வேண்டிய இந்திய நாட்டின் மிக முக்கியமான பைல்கள்கூட பெருமாள்சாமியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் பெருமாள்சாமி தான் செஞ்சிராமச்சந்திரனுக்கு எல்லாமே என்பது நிரூபணமாகியுள்ளது.

பதவி விலக மாட்டேன் என்று இவர் அறிவித்துள்ளதால் பிரதமர் வாஜ்பாய்க்கு நெருக்கடி உருவாகியுள்ளது.இவரை நீக்கினால் மதிமுகவை பகைத்துக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X