மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளையடித்த 2 பேர் கைது
கோவை:
கோயம்புத்தூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொன்று 30 பவுன் தங்க நகைகளைக்கொள்ளையடித்தவர்களை போலீசார் அதிவேகமாகச் செயல்பட்டு இரண்டே நாட்களில் கைது செய்துள்ளனர்.
கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி ராஜம். இரு நாட்களுக்குமுன் வீட்டில் தனியே இருந்த ராஜம் பட்டப் பகலில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலையானார்.அவரது கழுத்தில் கிடந்த சங்கிலி, உள்பட வீட்டில் இருந்த 30 பவுன் நகைகளும்கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந் நிலையில் ஊட்டியைச்சேர்ந்த சுப்பிரமணியன், மகேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம்இருந்து ராஜம் வீட்டில் திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
துடியலூர் பகுதியில் வைத்து இந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். கொலை நடந்த வீட்டில்இவர்கள் விட்டுச் சென்ற செருப்புகளை மட்டுமே வைத்து இந்த வழக்கில் துப்பு துலக்கியுள்ளனர்போலீசார்.
அதிவேகமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்த போலீசாரை அப் பகுதியினர் வெகுவாகப்பாராட்டுகின்றனர்.