For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேறு யாரையும் அமைச்சராக்க மதிமுக கோராது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

உதவியாளர் மீதான ஊழல் புகாரால் பதவி விலகிய செஞ்சி ராமச்சந்திரனுக்கு மாற்றாக வேறு யாரையும் மதிமுகசார்பில் அமைச்சராக்க மாட்டோம் என அக் கட்சி அறிவித்துள்ளது.

வேலூர் சிறையில் உள்ள மதிமுக தலைவர் வைகோவைச் சந்தித்துவிட்டு வந்த கட்சியின் அவைத் தலைவர்எல்.கணேசன் இன்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தெகல்கா ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவியை ராஜினாமாசெய்தார். பின்னர் அவர் மீதான குற்றம் தவறானது என்பதால் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதே தான்இப்போதும் நடக்கும்.

செஞ்சி ராமச்சந்திரன் குற்றமற்றவர். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. பிரதமருக்கு தர்மசங்கடமோ,நெருக்கடியோ தர வேண்டாம் என்பதால் தான் பதவி விலகினார். செஞ்சியாரிடம் உதவியாளராக இருந்தபெருமாள்சாமியால் மதிமுகவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டது உணமை தான். சி.பி.ஐ. தனது விசாரணையைமுடித்தால் செஞ்சி ராமச்சந்திரன் குற்றமற்றவர் என்பது நிரூபணமாகும். இதனால் சிபிஐ தனது விசாரணையைவிரைந்து முடிக்க வேண்டும்.

இந்தச் சம்பவத்தால் வைகோ அதிரிச்சியடைந்துள்ளார் என்றார் கணேசன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X