மதுரையில் இன்னொரு பயங்கரம்: ரெளடிகளால் வியாபாரி நடுரோட்டில் வெட்டிக் கொலை
மதுரை:
தா.கிருட்டிணன் படுகொலைச் சம்பவ பரபரப்பு அடங்குவதற்குள் மதுரையில் இன்னொரு பயங்கரக்கொலை நடந்துள்ளது.
மதுரை மேல அனுப்பானடி பகுதியில் மளிகைக் கடை வைத்திருந்த தங்கராஜ் என்பவர் அந்தப்பகுதியைச் சேர்ந்த ரவுடிகளால் நடுரோட்டில் விரட்டி விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டார்.
மதுரையில் கடைக்காரர்களை மிரட்டி மாமூல் வசூலிக்கும் ரவுடிகள் உள்ளனர். வசூலில் ஒருபகுதியை போலீசாருக்கும் கொடுத்து விடுவார்கள். இதனால் இந்தக் கும்பல்களை ஒழிக்கமுடியவில்லை.
இந்தக் கும்பல்களுக்கு மாமூல் கொடுப்பதைத் தவிர்க்க வியாபாரிகளே ஒன்று சேர்ந்து இதற்குஎதிரான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர். மாமூல் தர மாட்டோம் என கடைகளில் ஒட்டிவைத்துள்ளனர். இதனால் வியாபாரிகளுக்கும் ரவுடிகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல்நடப்பது வழக்கம்.
இந் நிலையில் மேல அனுப்பானடி வியாபாரிகள் சங்கத் தலைவராக இருந்த தங்கராஜ் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த சில ரவுடிகள் கடைக்காரர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதையடுத்துதங்கராஜ் அதைத் தட்டிக் கேட்டார். இதனால் அவருக்கும் ரவுடிகளுக்கும் இடையே தகராறுஏற்பட்டது.
இந் நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் தங்கராஜ் கடைக்கு வந்த சில ரவுடிகள் அவரிடம்தகராறு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து தங்கராஜுக்கும் ரவுடிகளுக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த ரவுடிகள் தங்களிடமிருந்த அரிவாளை எடுத்து தங்கராஜை வெட்டியுள்ளனர்.அவர்களிடமிருந்து தப்பிக்க தங்கராஜ் ஓடியுள்ளார். ஆனால் விடாமல் துரத்திய ரவுடிக் கும்பல்,தங்கராஜை ரோட்டிலேயே துடிக்கத் துடிக்க வெட்டிக் கொன்றனர்.
வியாபாரி கொலை செய்யப்பட்ட தகவல் அப்பகுதியில் பரவியதும், கடைகள் அடைக்கப்பட்டன.
ரவுடிக் கும்பலைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைஅறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications