நக்கீரன் நிருபர் கொலை வழக்கு: மாஜி அமைச்சரின் சகோதரர் விடுதலை
மதுரை:
மதுரை நக்கீரன் நிருபர் சண்முகசுந்தரம் கொலை வழக்கில், முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி ஜெபராஜின்சகோதரர் உள்ளிட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
மதுரை நக்கீரன் நிருபராக இருந்தவர் குள. சண்முகசுந்தரம். இவர் வளர்மதி ஜெபராஜுக்கு நெருக்கமானவராகஇருந்தார். அவர் அமைச்சரானவுடன் சண்முகசுந்தரம் அவரது தனி உதவியாளராகச் சேர்ந்தார்.
வளர்மதி ஜெபராஜை அவர் தனது கட்டுபாட்டில் வைத்திருந்தார். இது வளர்மதியின் சகோதரர் மனோகரனுக்குப்பிடிக்கவில்லை. இதுதொடர்பாக சண்முகசுந்தரத்திற்கும், மனோகரனுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்துவந்தது.
இந் நிலையில், கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் குள. சண்முகசுந்தரம் தனது வீட்டு வாசலிலேயேபடுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையையடுத்து வளர்மதி ஜெபராஜின் பதவியை முதல்வர் ஜெயலலிதா பறித்தார்.
கொலை தொடர்பாக மனோகரன், அவரது நண்பர்கள் மோகன், மொரக்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை மதுரை முதலாவது விரைவு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் மீதான குற்றச் சாட்டுக்கள் சந்தேகமே இல்லாமல் நிரூபிக்கப்படவில்லை என்பதால்இவர்களை விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார். இதையடுத்து அவர்கள் மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications