சென்னையில் வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் பணி தொடங்கியது
சென்னை:
சென்னை நகரில் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் பணி இன்று முதல் தொடங்கியது.
சென்னையில் பல பகுதிகளிலும் அந்தந்தப் பகுதி நலச் சங்கத்தினரே தனியார் துப்புறவுத்தொழிலாளர்களை நியமித்துள்ளனர். அவர்கள் தினமும் வந்து குப்பைகளை வீடு வீடாகச் சேகரித்துச்செல்கின்றனர்.
இப்போது இத் திட்டத்தை சென்னை மாநகராட்சியே ஆரம்பித்துள்ளது. மாநகராட்சியின்சார்பிலேயே வீடு வீடாகச் சென்று குப்பைகள் சேகரிக்கப்பட உள்ளன. இதன் மூலம் தெருக்களில்மக்கள் குப்பை கொட்டுவதைத் தடுக்க முடியும் என மாநகராட்சி கருதுகிறது.
மாநகராட்சியில் உள்ள 10 மண்டலங்களில், 7 மண்டலங்கள் முதல் கட்டமாக இத் திட்டத்தைஅமலாக்குகின்றன. மாநகராட்சி துப்புறவு ஊழியர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிப்பர்.
இன்னும் ஒரு ஆண்டில் சென்னையில் தெருவில் குப்பையே இல்லாத நிலையை உருவாக்கப்போவதாக மாநகராட்சி ஆணையாளர் விஜயக்குமார் கூறுகிறார்.
நல்லது நடந்தா சரி..












Click it and Unblock the Notifications