அழகிரியுடன் தயாளு அம்மாள் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் தனது மகன் மு.க.அழகிரியை திருச்சி சிறையில்சந்தித்துப் பேசினார். அவருடன் அழகிரியின் மனைவி காந்தியும் சென்றார்.
தா.கிருட்டிணன் கொலை தொடர்பாக அழகிரி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
அழகிரியின் மகள் கயல்விழி, மகன் துரை ஆகியோரும் சிறைக்குச் சென்று அவரைச் சந்தித்தனர்.அவர்களுடன் சென்ற முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி துணை மேயர் அன்பழகன்ஆகியோரை உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
தயாளு அம்மாள் உள்ளிட்டோர் சுமார் முக்கால் மணி நேரம் அழகிரியுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை சிறைக் கண்காணிப்பாளர் குமாரசாமிஅருகில் நின்று கவனித்துக் கொண்டிருந்தார்.












Click it and Unblock the Notifications