மற்ற மூவர் விவரம் நாளை வெளியாகும்?
மதுரை:
திமுக முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணனைக் கொன்றது யார், கொலை செய்ய உத்தரவிட்டது யார்என்ற தகவல்கள் நாளைக்குள் தெரியவரலாம்.
இந்தக் கொலை தொடர்பாக இதுவரை தாங்கள் திரட்டிய விவரங்களை மதுரை நீதிமன்றத்தில்போலீசார் நாளைக்குள் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
தா.கிருட்டிணன் வழக்கு விசாரணை கிட்டத்தட்ட முக்கிய கட்டத்தை நெருங்கி விட்டதாகத்தெரிகிறது. அவரை நான்கு பேர் சேர்ந்து கொன்றது உறுதியாகிவிட்டது. அதில் 3 பேர் கைதுசெய்யப்பட்டு மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களது பெயர்விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.
ஆனால், தேடப்பட்டு வந்த 4வது குற்றவாளியான இப்ராகிம் சுலைமான் சேட் நீதிமன்றத்தில்சரணடைந்துவிட்டார்.
மற்ற 3 கொலையாளிகளையும் நாளைக்குள் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.அப்போது இவர்களின் விவரமும் வெளியாகும்.
இதற்கிடையே இந்தக் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள அழகிரியின் ஜாமீன் மனு நாளைமதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அந்த சமயத்தில், கொலையாளிகள் 3 பேரையும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.