போலீஸ் காவலில் அழகிரி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தா.கிருட்டிணன் படுகொலை தொடர்பாக மேலும் விசாரணை நடத்துவதற்காக மு.க.அழகிரியைஒரு வாரத்திற்கு போலீஸ் காவலில் எடுக்க மதுரை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இப்போது அவர் நீதிமன்றக் காவலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றக் காவலில்வைக்கப்பட்டவரிடம் போலீசார் சிறையில் வைத்து விசாரணை நடத்த முடியாது. போலீஸ் காவலில்வைத்தால் தான் சிறையிலோ அல்லது காவல் நிலையத்துக்கோ கொண்டு சென்று விசாரிக்க முடியும்.

இந்தக் கொலைக்கு அழகிரி தான் சதித் திட்டம் தீட்டினார் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.மேலும் கொலையாளி முபாரக் உள்பட 4 பேரைக் கைது செய்துவிட்டனர். இன்னொரு கொலையாளிஇப்ராகிம் சென்னையில் சரணடைந்துவிட்டார்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் படுகொலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் தங்களுக்குக்கிடைத்துள்ளதாகவும் இதன் அடிப்படையில் அழகிரியிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டிஇருப்பதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.

இதனால் அழகிரியை ஒரு வாரத்திற்கு போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்கூறுகின்றனர்.

இதுதொடர்பாக இன்று மதுரை 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்யஉள்ளனர்.

அதே நேரத்தில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அழகிரி தாக்கல் செய்துள்ள மனுவும் இதேநீதிமன்றத்தில் இன்றே விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+